கரோனா வைரஸின் 2ஆவது அலை வேகமாக பரவியதை அடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தோடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சிகளை செய்து வருகிறது. 

Advertisement

ஒருவேளை ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு பெரும் ஏமாற்றமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு எழுச்சிப் பெற்று, இத்தனை ஆண்டுகளாக வலம் வந்த ஒரு சாம்பியன் அணியாகவே வந்துவிட்டது. அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல், இந்த முறை தனது ஆற்றலை புதுப்பித்து வந்திருக்கிறது. மொயீன் அலியை மூன்றாவது வீரராக களமிறக்கியது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

இடது கை பேட்ஸ்மேனான அலியை ஒன் டவுனில் இறக்கியதால், பல இன்னிங்ஸில் அவரது அதிரடியான ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமான முடிவுகளை வழங்கியுள்ளது. அனுபவமுள்ள ஃபாஃப் டு பிளசிஸ் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார், மேலும், ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு சிறந்த தொடக்கங்களை வழங்கினார். சாம் கரண் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து ஈர்க்கிறார், தன்னை மேம்படுத்துகிறார். 

இப்போது ஏலம் எடுக்க அவர் ஒரு சரியான ஆல் ரவுண்டராக உள்ளார். எனினும், மும்பைக்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் எடுத்த போதிலும், கடைசி பந்தில் ஆட்டத்தை இழந்ததை பார்க்கையில், ​​சென்னை அணி தனது பவுலிங்கை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது தெரிய வருகிறது.

ஒருவேளை நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டால் அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுள் ஏதேனும் ஒரு அணி தான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News