ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பயணத்தை துவங்கியது. அதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் ஆஃப்கானிஸ்தானை தங்களுடைய 2ஆவது போட்டியில் இந்திய அணி எதிர்கொண்டது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்தூள் தாகூர் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. குறிப்பாக டெல்லி மைதானத்தில் நடைபெற்ற கடந்து போட்டியில் இலங்கையை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.

Advertisement

அதன் காரணமாக பேட்டிங்க்கு சாதகமான அந்த மைதானத்தில் ஸ்பின்னர் வேண்டாம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் வேகத்தில் மிரட்டக்கூடிய முகமது ஷமியை தேர்ந்தெடுக்காமல் ரன்களை வாரி வழங்கக்கூடிய தாக்கூரை தேர்ந்தெடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.

ஒருவேளை அணியின் கலவைக்காக தேவைப்பட்டால் 2019 உலகக்கோப்பையில் இதே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்த ஷமி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் என்ன தவறு செய்தார். இது கடினமான முடிவாக இருக்கும். ஆனால் இத்தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் எடுத்திருக்கலாம்.

அது போன்ற சூழ்நிலையில் 2019 உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த முகமது ஷமி வாய்ப்பு பெறுவார் என்று நான் நினைத்தேன். ஏனெனில் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர் வெற்றியை தலைகீழாக மாற்றினார். அவரை சேர்த்திருந்தால் அது எதிரணிக்கு மனதளவிலான அழுத்தத்தை கொடுப்பது போல் அமைந்திருக்கும்.

ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவருக்கு 2019 அணியை விட தற்போதைய ஆஃப்கானிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் இருந்திருந்தாலும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மறுபுறம் அணியின் நலனுக்காக அஸ்வின் இது போல் பலமுறை கழற்றி விடப்பட்டு வருகின்றார்” என்று  என்று விமர்சித்துள்ளார்.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News