ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த சுனில் நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

Advertisement

அதன்பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் 84 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் விக்கெட்டை இழக்க, 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய் ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும், ரிங்கு சிங் 26 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் அணி வீரர் சுனில் நரைன் பவர்பிளே ஓவர்களிலேயே தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்களில் 3 அரைசதங்களுடன் கிறிஸ் கெயில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது அச்சாதனையை சுனில் நரைன் சமன்செய்துள்ளார். 

இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 6 முறை பவர்பிளே ஓவர்களில் அரைசதம் கடந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து கிறிஸ் கெயில், சுனில் நரைன், ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 3 முறை பவர்பிளேவில் அரைசதங்களை அடித்து இரண்டாம் இடத்திலும், கேஎல் ராகுல், விருத்திமான் சஹா, கைல் மேயர்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா 2 முறை பவர்பிளே ஓவர்களில் அரைசதங்களை அடித்து மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News