தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் நகரில் நடைபெற்று முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 245 ரன்கள் எடுத்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 17, ஜெய்ஷவால் 17, ஷுப்மன் கில் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

Advertisement

அப்போது மிடில் ஆர்டரரில் நிதானமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 107/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலாக மாறி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்கள் குவித்தார்.

Advertisement

அந்த வகையில் பேட்டிங்க்கு சவாலான மைதானத்தில் மற்ற வீரர்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தனி ஒருவனாக சதமடித்த ஓரளவு தன்னுடைய அணியை காப்பாற்றிய அவர் தென் ஆப்ப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான தொடக்கத்தை பெற்ற தென் ஆப்பிரிக்காவை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் இந்த போட்டியில் ராகுல் ஃபுட் வொர்க் தம்மை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பதிவில், “சிறப்பாக விளையாடினீர்கள் கேஎல் ராகுல். அவருடைய தெளிவான சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் ஃபுட் வொர்க் துல்லியமாகவும் உறுதியுடனும் இருந்தது. அது பேட்ஸ்மேன் சரியாக செயல்படும் போது நிகழக் கூடியதாகும். இந்த சதம் இப்போட்டியில் முக்கிய திருப்பு முனையாக இருக்கும்.

நேற்று ஒரு கட்டத்தில் இருந்ததை வைத்து இந்தியா தற்போது 245 ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நந்த்ரே பர்கர் மற்றும் ஜெரால்ட் கோட்சி ஆகியோர் தென் ஆப்பிரிக்கா பவுலிங் துறையில் நல்ல சேர்வாக இருக்கிறார்கள். இருப்பினும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தென் ஆப்பிரிக்கா தங்களுடைய பந்து வீச்சு செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News