இந்தியா -ன்இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் ரோஹித் சர்மா திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் 11 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 256 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 127 ரன்கள் குவித்து அசத்தினார்.

Advertisement

இந்நிலையில் போட்டி முடிந்து தான் விளையாடியது பேசிய ரோகித் சர்மா, “என்னால் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய நினைத்தேன். அதே போன்று இந்த சதம் கிடைத்தது மிகவும் ஸ்பெஷலானது. அதுமட்டுமின்றி போட்டியின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம்.

ஒரு அணியாக நாங்கள் செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. என்னுடைய முதல் வெளிநாட்டு சதம் இதுதான். அதுவும் அணிக்கு தேவையான நேரத்தில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் இந்த சதம் வந்துள்ளது. ஆரம்பத்தில் நான் சதம் அடிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. ஆனால் அணியின் ரன் குவிப்பிற்கு நிச்சயம் என்னுடைய இந்த இன்னிங்ஸ் உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இரண்டாவது இன்னிங்சின் போது முன்னிலை பெற்றதும் பவுலர்களின் மீது அழுத்தத்தை கொடுக்க நினைத்தோம்.

அந்த வகையில் நான் இந்திய அணிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சி. ஒரு போட்டியின் துவக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் நான் இந்த போட்டியில் எனது சரியான பங்களிப்பை அளித்து உள்ளேன். நிச்சயம் இந்த சிறப்பான ஆட்டத்தை அடுத்த போட்டிக்கும் கொண்டு செல்வேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News