நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28ஆஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்களை குவித்தது. நெதர்லாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் குவித்து அசத்தினார்.

Advertisement

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பால் மெக் கீரன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், “இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசியதாகவே நினைக்கிறேன். ஆனாலும் நாங்கள் நெதர்லாந்து அணியை 160-170 ரன்களில் நிப்பாட்டி இருக்க வேண்டும். அதனை எங்களால் செய்ய முடியாமல் போனது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த தொடரில் எங்களது செயல்பாடு எனக்கு திருப்தியாக இதுவரை அமையவில்லை.

இந்த இடத்தில் நாங்கள் இருப்பது வருத்தம் அளிக்கும் ஒன்றாகவே உள்ளது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறோம். தற்போதைக்கு எங்களது மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் குறித்து சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இது முழுமையான பங்களாதேஷ் அணி கிடையாது இருந்தாலும் நாங்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் போது எங்களுடன் ரசிகர்கள் துணை நிற்கிறார்கள் என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News