முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெர்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஜ்சாப் கிங்ச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஃபினிஷர் ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தது. இதில் அதிக பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 44 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் 74 ரன்களையும், ஜோஸ் பட்லர் 54 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 46 ரன்களையும் சேத்தும் கூட அந்த அணி 20 ஓவர்களில் 232 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராட் டைட்டன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஷுப்மன் கில், “நாங்கள் டாஸை வென்று பந்துவீசி அதன்பின் பேட்டிங் செய்யும்போது எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் பந்துவீச்சில் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மைதானத்திலும் எங்களை ஏமாற்றிவிட்டோம். நாங்கள் 18 ரன்கள் எடுத்தபோது நடுவில் இருந்த மூன்று ஓவர்கள், அதுவும் முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
அது எங்களுக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இருப்பினும் இப்போட்டியில் சில நல்ல விசங்களும் உள்ளன. இந்த போட்டியில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தது. 15 ஓவர்கள் பெஞ்சில் அமைர்ந்த பிறகு யாராவது ஒரு இம்பாக்ட் வீரராக வந்து அந்த யார்க்கர்களை வீசுவது ஒருபோதும் எளிதானது அல்ல. ஆனால் வைஷாக் விஜயகுமார் அதனை சரியாக செய்தார். அவருக்கு என்னுடையா பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.