ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கல் மெகா எலாத்தில் பங்கேற்கும் அணிகளின் ஏலத்திகையானது ரூ. 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகையானது ரூ.110 கோடிகளாக இருந்த நிலையில் இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கொண்டு எதிர்வரும் வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்தது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்றும் குறிப்பிட்டது.

Advertisement

அந்தவகையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதவிர்த்து சென்னை, லக்னோ, குஜராத், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்து வீரர்கள் பட்டியலில் மூன்று வீரர்கள் மட்டுமே ரூ.20 கோடிக்கு மேல் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இப்பட்டியலில் பார்ப்போம்.

3. நிக்கோலஸ் பூரன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனை அந்த அணி நிர்வாகம் ரூ.21 கோடிக்குக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த சீசனில் நிக்கோலஸ் பூரன் பெற்ற தொகையை விட ரூ.5 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் அணியின் வெற்றியிலும் பெரும் பங்கினை வகித்தார். அதன்படி 14 போட்டிகளில் விளையாடியா அவர் 62.38 சராசரி மற்றும் 178.21 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 499 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில், பூரன் 35 பவுண்டரிகள் மற்றும் 36 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதுதவிர்த்து மற்ற டி20 லீக் போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

2. விராட் கோலி

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி ஆர்சிபி அணியானது விராட் கோலியை ரூ.21 கோடிக்கு ஏலத்தில் தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு தக்கவைக்கப்பட்ட முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் விராட் கோலி பெற்றுள்ளார். முன்னதாக காடந்த முறை ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ரூ.15 கோடி தக்கவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதனைவிட ரூ.6 கோடி அதிக தொகைக்கு அவர் தற்ப்போது தக்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1. ஹென்ரிச் கிளாசென்

Advertisement

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டரான ஹென்ரிச் கிளாசென், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். அந்தவகையில் கடந்த சீசன் வரை ரூ.5.25 கோடி சம்பளத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென், தற்போது ரூ.23 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். கடந்த இரப்டு சீசன்களிலும் அதிரடியாக விளையாடி வந்தா கிளாசெல், 2023 ஆம் ஆண்டில், 12 போட்டிகளில் விளையாடி 32 பவுண்டரிகள் மற்றும் 25 சிக்ஸர்களுடன் 448 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில் அவரது சராசரி 50 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 177 ஆகவும் இருந்தது. கடந்த சீசனில் கிளாசென் 16 போட்டிகளில் விளையாடி 40 சராசரி மற்றும் 171.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 479 ரன்களைச் சேர்த்தார். இதில் அவர் 19 பவுண்டரிகள் மற்றும் 38 சிக்ஸர்களை விளாசியதன் காரணமாக, கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை விட அணி அவருக்கு அதிக தொகையை வழங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News