ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்திருந்தார். 

Advertisement

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். பேட்டிங் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

Advertisement

பிறந்த நாளில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா வீசிய நக்கிள் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த பந்தை தவறாக கணித்த ரோஹித் சர்மா, அதிவேகமாக ஆடினார். மெதுவாக ஸ்விங் ஆகி வந்த பந்து ஆஃப்-ஸ்டம்பின் மேல் முத்தமிட்டது போல் தொட்டு பைஸ்ஸை கீழே தள்ளியது. இதனால் அவுட் என்ற முறையில் ரோகித் சர்மா வெளியேற, அப்போதிருந்து ட்விட்டரில் எண்ணற்ற ட்விட்டர் வாசிகள் ரோஹித் சர்மா உண்மையிலேயே அவுட்டானாரா என்று விவாதம் செய்து வருகின்றனர். 

 

இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி, பொறுப்புடன் விளையாடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது. கேமரூன் கிரீன் சீரான இடைவெளியில் பவுண்டரி மற்ரும் சிக்சர்களை விலாசினார். இதன் மூலம் இந்த கூட்டணி 62 ரன்களை எடுத்திருந்தபோது, 28 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் இஷான் கிஷன் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்து, அதிரடியாக தொடங்கினார்.  

இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் 44 ரன்கள் சேர்த்து இருந்தபோது, அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளை தொடர்ந்து, சுழற்பந்துவீச்சை கொண்டு மும்பை அணிக்கு ராஜஸ்தான் அணி கடும் நெருக்கடி கொடுத்தது.

Advertisement

13வது ஓவரில் இருந்து அதிரடி காட்ட தொடங்கிய  திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி, பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாச, கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி வெற்றி பெற 32 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா, வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து, கடைசி ஓவரில் மும்பை வெற்றி பெற 17 ரன்கள் தேவையாக இருக்க, ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் டேவிட் சிக்சராக விளாச19.3 மும்பை அணி அபார வெற்றி பெற்றது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News