இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் அபீஜித் தோமர் சதமடித்து அசத்தியதுடன் 111 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் மஹிபால் லாம்ரோர் 60 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில் துஷார் ரஹேஜா மற்றும் பூபது குமார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்தி வந்த ஜெகதீசன் 65 ரன்களுக்கும், பாபா இந்திரஜித் 37 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை போராடிய விஜய் சங்கரும் 49 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் தாமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ராஜஸ்தான் அணி தரப்பில் அமன் சிங் 3 விக்கெட்டுகளையும், அன்கித் சௌத்ரீ மற்றும் அஜய் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தழுவினாலும் நட்சத்திர வீரர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் ஒருமுறை தனது பந்துவீச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 9 ஓவர்களில் 52 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து வருண் சக்ரவர்த்தி விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News