ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர் விராட் கோலி இத்தொடரில் 2 சதங்கள் உள்பட 540 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். 

Advertisement

அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சவாலான பிட்ச்சில் 101 ரன்கள் குவித்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தார். மேலும் அந்தப் போட்டியில் நேரம் செல்ல பிட்ச் மெதுவான காரணத்தால் கடைசி நேரத்தில் அவர் சற்று மெதுவாக விளையாடி சத்தத்தை தொட்டார்.

Advertisement

ஆனால் அதை புரிந்து கொள்ளாத சிலர் சொந்த சாதனைக்காக சதமடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி மிகவும் சுயநலத்துடன் விளையாடியதாக விமர்சித்தனர். குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி சுயநல எண்ணத்துடன் விளையாடியதாக வெளிப்படையாகவே ட்விட்டரில் விமர்சித்தார்.

மேலும் 49ஆவது ஓவரில் அணியின் நலன் கருதி அதிரடியாக விளையாடாமல் சிங்கிள் எடுத்து விராட் கோலி சதத்தை தொட்டதாக விமர்சித்த அவர் ரோஹித் சர்மா மட்டுமே தன்னலமின்றி அணியின் நலனுக்காக விளையாடியதாகவும் தெரிவித்தார். அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் தேவையின்றி எங்களுடைய வீரரை விமர்சிக்க வேண்டாம் உங்களுடைய பாகிஸ்தான் அணியும் பாபர் ஆசாமும் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்தனர்.

 

இந்நிலையில் உங்களுடைய இந்த கருத்து வடிகட்டிய முட்டாள்தனத்தை போல இருப்பதாக முஹம்மது ஹபீஸ்க்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஹபீஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு அவர் பதிலளித்துள்ளது பின்வருமாறு. “வாங்கள் முகமது ஹபீஸ். இந்தியா மகத்தான கிரிக்கெட்டை விளையாடி 8 அணிகளை தோற்கடித்துள்ளது. விராட் கோலி தற்போது 49 சதங்கள் அடித்துள்ளார்

Advertisement

அவரின் கடைசி சதம் கடினமான பிட்ச்சில் நங்கூரமாக விளையாட வேண்டிய நிலைமையில் வந்தது. அதில் அவருடைய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இப்பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News