நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற க்ரூப் டி பிரிவுக்கான லீக் போட்டியில் விதர்பா மற்றும் உத்திர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணிக்கு அபிஷேக் கோஸ்வாமி மற்றும் ஆர்யன் ஜூரல் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் கோஸ்வாமி 32 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்யன் ஜூரெலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மாதவ் கௌசிம் மற்றும் சமீர் ரிஸ்வி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மாதவ் கௌசிக் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிங்கு சிங்கும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சமீர் ரிஸ்வி தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்த சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரியம் கார்க் 34 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் மாவி 33 ரன்களையும் சேர்த்து அணியை கரைசேர்த்தனர். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 307 ரன்களைக் குவித்தது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நச்சிகேத் பஹ்தே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே - யாஷ் ரத்தோட் இணை அதிரடியாக தொடங்கினர். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 63 ரன்களை எடுத்திருந்த நிலையில் துருவ் ஷோரே 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் யாஷ் ரத்தோடுடன் இணைந்த நட்சத்திர வீரர் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவெ உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அபாரமாக விளையாடியதுடன் தங்களது சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷ்ப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அதன்பின் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 112 ரன்களை எடுத்திருந்த நிலையில் கருண் நாயர் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷ் ரத்தோட் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸார் என 138 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் விதர்பா அணி 47.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் உத்திர பிரதேச அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் விதர்பா அணி நடப்பு சீசனில் தங்களது ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News