உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதால், சதம் விளாசி அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

Advertisement

ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் சதம் விளாச வாய்ப்பு கிடைத்தும் விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது விராட் கோலி ரசிகர்களின் கரகோஷத்திற்கு நடுவில் களமிறங்கினார். இதன்பின் தொடக்கத்திலேயே தனது ட்ரேட் மார்க் ஷாட்டான கவர்ஸ் திசையில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார்.

Advertisement

இதனால் விராட் கோலி தொடக்கத்திலேயே நல்ல மனநிலையில் இருப்பதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் அடிக்க, கொல்கத்தா மைதானமே உற்சாகத்தில் கொண்டாடியது. இதன்பின் ஆடுகளம் மாறியதால் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களிலும், கேஎல் ராகுல் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது.

அதன்பின் தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசி நிதானம் காத்த விராட் கோலி, 119 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்கள் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் 451 இன்னிங்ஸ்களில் 49 சதங்களை விளாசினார். ஆனால் விராட் கோலி 277 இன்னிங்ஸ்களிலேயே 49வது சதத்தை விளாசியுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் பிறந்தநாளன்று சதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் பிறந்தநாளன்று உலகக்கோப்பையில் சதம் விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தங்களது பிறந்தநாளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News