ஐசிசி உலகக் கோப்பை தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் ஏற்கனவே 6 போட்டியில் 6 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியிலும் வென்று அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெரும் முனைப்புடன் களமிறங்கியது.

Advertisement

மறுபுறம் இப்போட்டியில் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறுவதை தடுக்கும் முனைப்புடன் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பவுண்டரியை அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முயற்சித்த போது மதுஷங்கா வேகத்தில் 4 ரன்களில் கிளீன் போல்டானார்.

Advertisement

இந்த நிலையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தமக்கு மிகவும் பிடித்த இலங்கையை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் தன்னுடைய பங்கிற்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 8 பவுண்டரியுடன் முதல் ஆளாக அரை சதமடித்தார்.

மேலும் இந்த 50 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 8,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி ஆசியாவின் புதிய கிங்காக சாதனை படைத்தார். 

  • விராட் கோலி : 159*
  • சச்சின் டெண்டுல்கர் : 188
  • குமார் சங்ககாரா : 213
  • சனாத் ஜெயசூர்யா : 254

இது போக இந்த 50 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 1000 ரன்களையும் கடந்துள்ளார். இதற்கு முன் ஏற்கனவே 7 காலண்டர் வருடங்களில் 1000 ரன்கள் அடித்துள்ள அவர் இதையும் சேர்த்து மொத்தம் 8 வருடங்களில் தலா 1000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

  • விராட் கோலி : 8*
  • சச்சின் டெண்டுல்கர் : 7
  • சௌரவ் கங்குலி/ரிக்கி பாண்டிங்/குமார் சங்ககாரா : 6

 

Advertisement

இது மட்டுமல்லாமல் உலகக் கோப்பையில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை தொடக்க வீரராக களமிறங்காமல் 13 முறை 50+ ரன்கள் அடித்துள்ள நிலையில் இதற்கு முன் குமார் சங்ககாரா 12 முறை அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையடுத்து இப்போட்டியில் விராட் கோலி சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கு வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவர் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News