மைதானத்தில் கட்டித் தழுவிய ஆர்சிபி வீரர்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Fri, Sep 23 2022 20:52 IST
Virat Kohli, Glenn Maxwell, Harshal Patel all SMILES in RCB Reunion (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது. இதன்மூலம் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கிட்டத்தட்ட ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் ஆட்டத்தில் வெற்றிபெறுவதில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். அதேபோல் இந்திய அணியில் பும்ரா மீண்டும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்தியா - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்போது இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பார்த்ததும் கட்டிபிடித்து நட்பு பாராட்டினார். இதனைத்தொடர்ந்து ஹர்சல் படேலும் மேக்ஸ்வெல்லுடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார்.

 

தொடர்ந்து விராட் கோலி - மேக்ஸ்வெல் கட்டிபிடித்து நட்பு பாராட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை