தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 03ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி சமன்செய்தாலோ தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும். அதேசமயம் தொடரை சமன்செய்யும் நோக்குடன் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில்,  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தினால் புத்தாண்டு என்று கூட பாராமல் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல் போட்டியில் செய்த தவறை திருத்திக் கொள்ளும் வகையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியது. குறிப்பாக இங்கிலாந்து அணி  டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுகிறார்களோ, அதே ஸ்டைலில்  இந்தியாவும் இறங்க முடிவு எடுத்து உள்ளது. 

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் ரன் குவிப்புக்கு சாதகமாகவும் அதேசமயம் வேகப்பந்து வீச்சுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்கிறது. அதையும் மீறி அதிரடி காட்டினால் நிச்சயம் ரன்கள் கிடைக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்களும் அதே பார்முலாவை பயன்படுத்தி அதிரடியை காட்ட முடிவெடுத்து இருக்கிறார்கள். 

இந்த பயிற்சியின் போது விராட் கோலிக்கு இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் பந்துவீசினர். அதேபோல் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவும் விராட் கோலி பயிற்சி மேற்கொண்டார். அதில் முதல் டெஸ்ட் போட்டியில் எப்படி க்ரீஸில் இருந்து சில மீட்டர் தூரம் முன் நின்று பந்தை எதிர்கொண்டாரோ, அதேபோல் பயிற்சி மேற்கொண்டார். 

அப்போது அஸ்வின் வீசிய ஒரு பந்தை சரியாக இறங்கி வந்து தலைக்கு மேல் சிக்சர் அடித்து அசத்தினார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அஸ்வின் பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த ஷாட்கள் சில வாரங்களுக்கு முன் ட்ரெண்டாகின. அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான அஸ்வினின் பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம் விராட் கோலி நிச்சயம் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News