வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் சென்னை வந்தடைந்ததுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கவுள்ளார். இதன் காரணமாக விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில் விராட் கோலி இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்வார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன் என்பதை நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து அதை நிரூபித்துள்ளார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் விராட் கோலி மீண்டும் விளையாடுவதை பார்பதற்கு அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளை நேசிப்பதோடு, அவற்றுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். மேலும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்னதாக இந்த்ஜிய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உள்ளது. 

இதனால் இந்த டெஸ்ட் சுழற்சியில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி எப்போது அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் இந்த மூழு டெஸ்ட் சீசனிலும் அவரின் அதிரடியான ஆட்டத்தை நம்மால் பார்க்க முடியும். அதேசமயம் வங்கதேச அணியிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், அவர்களுக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கோலிக்கு உள்ளது. அதன்படி விராட் கோலி மேற்கொண்டு 58 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 சர்வதேச ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்துவார். தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் பெயரில் பதிவாகிவுள்ளது. இது தவிர, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கார ஆகியோருக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை எட்டும் 4ஆவது வீரர் எனும் பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News