நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக நழுவவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த முறை நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ரஹானே சிறப்பாக விளையாடி கொடுத்தார். அப்போது இவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். அதன் பிறகு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் இருந்தார்.

Advertisement

அத்னபின் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தனது மற்றொரு பக்கத்தை காட்டினார். ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் பிசிசிஐ இவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு எடுத்தது. எடுத்ததற்கு பிரதிபலனாக முதல் இன்னிசில் 89 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் என இக்கட்டான சூழல்களில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார்.
பேட்டிங்கில் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்பதால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் ரஹானேவின் ஆட்டம் குறித்து பேசிய முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர், “இரண்டு இன்னிங்ஸிலும் ரஹானே பேட்டிங் செய்த விதம் மற்றும் அழுத்தத்தை உள்வாங்கிய விதம். முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரைத் துரத்திய இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே கதைதான். அந்த அழுத்தத்தை தன்னால் உள்வாங்க முடியும் என்று காட்டியுள்ளார். ரஹானே தனது இந்த அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும். இது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News