ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறும் வாசிம் ஜாஃபர்!

Updated: Fri, Jul 26 2024 12:20 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.

மேற்கொண்டு இந்த ஏலத்திற்கு முன்னதாக எந்தெந்த வீரர்கள் தங்களது அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இந்த முறை தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்க கோரி ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் விரும்பம் தெரிவித்துள்ளன. ஆனால் ஐபிஎல் அணிகளின் ரிடென்ஷன் விதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங் அணியானது தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபரை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர், 2022ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்திற்கு முன்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

அதன்பின்னரும் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ள காரணத்தால் தற்சமயம், அந்த அணியின் தலைமை பயிற்சியாளரை மாற்றும் முடிவை பஞ்சாப் கிங்ஸ் அணி மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்த பதிவியில் வாசீம் ஜாஃபரை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த 10 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வரும் பஞ்சாப் அணி இவரது தலைமையில் சாதிக்குமா என்பதை பொறுத்தான் பார்க்க வேண்டும்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை