வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மஹ்மதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

 வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடாகேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 82 ரன்களையும், எவின் லூயிஸ் 49 ரன்களையும் எடுத்தனர்.

Advertisement

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயாஅன் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 12) நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச வீரர் தன்ஸித் ஹசனின் செயல் குறித்த காணொளி ஒன்று இணையாத்தில் வைரலாகி வருகிறது. 

அதன்படி இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர் பிராண்டான் கிங் சிறாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் தன்ஸிம் ஹசன் பந்துவீச்சை எதிர்கொண்ட பிராண்டன் கிங் பந்தை தடுத்து விளையாடினார். அப்போது பந்தை பிடித்த தன்ஸிம் ஹசன், பிராண்டன் கிங்கை நோக்கி பந்தி வீசிய நிலையில் அதனை பிராண்டன் கிங் தடுத்தார். இதையடுத்து தன்ஸிம் ஹசன் நடுவரிடம் அவுட் என அப்பீல் செய்தார். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் கோபமடைந்த பிராண்டன் கிங் வங்கதேச வீரர் தன்ஸிம் ஹசனை முறைத்ததுடன் அவரை நோக்கி சில வார்த்தைகளை விட்டார். இதனையடுத்து இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் களநடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். இந்நிலையில் பிராண்டன் கிங் - தன்ஸிம் ஹசன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News