இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. மழை காரணமாக 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்தது.

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கமிந்து மெண்டிஸ் 64 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் இலங்கை அணி 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் மீண்டும் தனது ஃபீல்டிங் திறனை ரசிகர்களிடம் காட்டினார். அதன்படி, இப்போட்டியின் 4ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்தை மிட் ஆன் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். ஆனால் அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்தை பிடித்ததுடன் அபாரமான டைவை அடித்து ரன் அவுட்டாக்கினார். 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News