ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisement

அந்தவகையில் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இளம் வீரர்களான ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பொறுப்புகளும் அதிகரித்துள்ளதால் அவர்கள் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்து துபாயில் நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் துபாய் சென்றடைந்தனர். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களுடைய பயிற்சியைத் தொடங்கினர். மேலும் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் இன்றைய பயிற்சியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பந்த் கயமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்தது, அப்போது ஹார்டிக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்த வலைக்கு அருகில் ரிஷப் பந்த் நின்றுள்ளார். அப்போது ஹர்திக் பாண்டியா அடித்த ஒரு பந்தானது நேரடியாக ரிஷப் பந்தின் இடது முழங்காலில் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து வலியால் அவதிப்பட்ட ரிஷப் பந்திற்கு அணி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிஷப் பந்த் வலியால் தடுமாறி நடந்து சென்று பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் அவரது காயம் பெரிதளவில் இருக்காது என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பயிற்சியின் போது ரிஷப் பந்த் காயமடைந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் காயத்தில் இருந்து மீண்டு கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்த அவர், அதன்பின் இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News