Wiaan Mulder And Babar Azam Fight Video: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது. 

Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதன்மூலம் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ராம் ஷஷாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர். இதில் பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து விளையாடிய வந்த நிலையில் தென் அப்பிரிக்க வீரர் வியான் முல்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த முழு சம்பவம் பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸின் 32ஆவது ஓவரில் நடந்தது அதன்படி அந்த ஓவரின் நான்காவது பந்தை வியான் முல்டர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். அதனை சரியாக கணித்த பாபர் ஆசாம் பந்தை தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து அந்த பந்து நேராக வியன் முல்டரை நோக்கிச் சென்றது, அங்கு அவர் பந்தை பிடித்து நேராக ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி வீசினார்.

ஆனால் முல்டர் வீசிய பந்தானது பாபர் ஆசாமின் காலில் பலமாக தாக்கியது. இது முழுக்க முழக்க வியான் முல்டரின் தவறு என்றாலும் அவர் அதற்காக மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, பாபர் ஆசாமிடம் ஆக்ரோஷமாக வார்த்தைகளை விட்டார். முல்டரின் இத்தகைய செயலால் கோபமடைந்த பாபர் ஆசாம், நடுவரிடம் அவரைப் பற்றி புகார் செய்தார். இதுமட்டுமின்றி, இந்த சம்பவம் குறித்து ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர் ஐடன் மார்க்ராமிடமும் சில வார்த்தைகளை கூறினார்.

Advertisement

இருப்பினும், வியான் முல்டர் இவ்வாறான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய பிறகும் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் பொறுமை இழக்காமல் அமைதியாக இருந்ததுடன் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடாமல் நிதானமாக இருந்தது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் பாபர் ஆசாமிடம் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News