இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான ஒரு வெற்றியை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கில் இருவரும் 142 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு தந்தார்கள். இதற்கடுத்து இந்திய அணி திடீரென 185 ரன்கள் விக்கெட்டுகள் என்று சிறிதாக நெருக்கடிக்கு வந்தது. இந்த நேரத்தில் கேஎல் ராகுல் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.  

Advertisement

இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கேஎல்ராகுல், “கேப்டன் பதவி என்பது, இது எனக்கு முதல் முறை நடப்பது கிடையாது. இதற்கு நான் பழகி விட்டேன். நான் அதை விரும்புகிறேன். கொழும்புவிற்கு பிறகு இங்கு ஆரம்பத்தில் சொர்க்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. இது கடினமானது. உடல் ரீதியாக சவால் ஆனது.

ஆனால் நாங்கள் அனைவரும் உடற் தகுதியில் வேலை செய்திருக்கிறோம். அது களத்தில் வெளிப்படுகிறது. நாங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாட திட்டமிட்டோம். எனவே அவர்கள் 10 ஓவர்கள் வீச வேண்டி இருந்தது. ஷுப்மன் கில் செட் பேட்டர் ஆட்டம் இழந்த பொழுது ஆட்டம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால் சூர்யாவுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடிந்தது. 

இது போன்ற சவாலான சூழ்நிலையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இருவரும் நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடிப்பது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என பேசிக்கொண்டே இருந்தோம். எங்கள் பேட்டர்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள். நாங்கள் எதிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் எப்பொழுதும் ஒரு சமநிலையில் இருக்கவே விரும்புகிறோம். எனவே நாங்கள் ஆழமாக எடுத்துச் சென்றோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News