டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அயர்லாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்கள் எடுத்த போது ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பல்பெர்னே 62 ரன்களும், டக்கர் 34 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி, களமிறங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. மழை சிறிது நேரத்தில் நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கியது. ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் வந்த டேவிட் மாலன் 34 ரன்களும், அதிரடியாக ஆடிய மொய்ன் அலி 12 பந்துகளில் 24 ரன்களும் எடுத்ததன் மூலம் 14.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 105 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. 

இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அயர்லாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர், அயர்லாந்து அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது என பெருந்தன்மையுடன் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய பட்லர் ,“எங்களின் இந்த தோல்விக்கு மழையை காரணம் சொல்வது சரியாக இருக்காது. அயர்லாந்து அணி பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் எங்களை விட சிறப்பாகவே செயல்பட்டது என்பதே உண்மை. மழை அதிகமாக பெய்தது. மழையின் குறுக்கீடு காரணமாகவே நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இரண்டாவது பேட்டிங் செய்தால் அதிவிரைவாக இலக்கை எட்டிவிடலாம் என்றே நினைத்தோம், ஆனால் அயர்லாந்து அணி மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அயர்லாந்து அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News