ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!

Updated: Wed, Jan 11 2023 19:21 IST
Will Rishabh Pant Play In IPL 2023? Sourav Ganguly Provides An Update (Image Source: Google)

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன.

மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கோகிலாபென் மருத்துவமனையில் ரிஷப் பந்துக்குக் கடந்த வாரம் முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ரிஷப் பந்தின் உடல்நிலை பற்றி பிசிசிஐயின் முன்னாள் தலைவரும் இந்திய முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடர்ல் ரிஷப் பந்த் விளையாட மாட்டார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் தொடர்பில் உள்ளேன். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி நன்றாக விளையாடும். ஆனால் ரிஷப் பந்துக்கு ஏற்பட்ட காயம் டெல்லி அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை