Rishabh pant accident
என்னுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன் - விபத்து குறித்து மனம் திறந்த ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அனைத்து விட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்த ரிஷப் பந்த், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதம், 11 அரைசதங்களுடன் 2,271 ரன்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 865 ரன்களையும், 66 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 935 ரன்களையும் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோசமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். அதன்பின் நடக்கவே முடியாடஹ் நிலையில் மருத்துவ சிகிச்சைப்பெற்று வந்த அவர், தற்போது ஒருசில மாதங்கங்களாக நடக்க ஆரம்பித்து பயிற்சிக்கும் திரும்பியுள்ளார். தற்சமயம் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.