இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நெபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணமாக ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார். மேற்கொண்டு சஜீவன் சஞ்சனா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கத்திற்கு மாறாக ஷஃபாலி வர்மா - தயாலன் ஹேமலதா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 122 ரன்களைக் குவித்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தயாளன் ஹேமலதா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் சதத்தை நெருங்கிய ஷஃபாலி வர்மாவும் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஜீவன் சஞ்சனாவும் 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனல் இந்திய அணியும் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும், ரிச்சா கோஷ் 6 ரன்களையும் சேர்க்க, இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்களைக் குவித்தது. நேபாள் அணி தரப்பில் சிதா ரானா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள் அணி சம்ஜானா கட்கா - சிதா ரானா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சம்ஜானா கத்கா 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிற கபிதா கன்வர் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் 18 ரன்கள் சேர்த்திருந்த சிதா ரனாவு, அவரைத்தொடர்ந்து 14 ரன்களில் கேப்டன் இந்து பர்மாவும், 15 ரன்களில் ருபியா சேத்ரியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய வீரர்களில் பிந்து ராவல் 17 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தியதுடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News