மகளிர் டி20 உலகக்கோப்பை: முனீபா அலி அபார சதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பி பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொன்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய முனீபா அலி சதமடித்து அசத்தினார். பின் அவர் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அய்ரலாந்து தொடக்கம் முதலே சீரானா இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 16.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரெண்டர்காஸ்ட் 31 ரன்களும் , எமியர் ரிச்சர்ட்சன் 28 ரன்களும் எடுத்தனர் .பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.