யுவாராஜ் சிங்கின் பரிசிற்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!

Updated: Wed, Feb 23 2022 22:05 IST
‘You've been an inspiration’: Virat Kohli Responds to Yuvraj Singh's Handwritten Note (Image Source: Google)

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் பிப்ரவரி நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு தங்கநிற பூட்ஸ்ஸினை பரிசாக அளித்தார். மேலும் அதோடு ஒரு கடிதத்தையும் எழுதி இருந்தார்.

சமீபத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய விராட் கோலிக்கு இந்த பரிசினை தனது அன்பு பரிசாக யுவ்ராஜ் சிங் வழங்கி இருந்தார். இந்நிலையில் அவரது இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலியும் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் யுவராஜ் சிங்கிற்கு நன்றி தெரிவித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள விராட் கோலி, “உங்களுடைய அன்பிற்கு நன்றி யுவி பாய். நீங்கள் கேன்சரில் இருந்து போராடி மீண்டு வந்த விதம் மக்கள் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. எப்போதுமே உங்களை சுற்றியுள்ள நபர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

விராட் கோலி வெளியிட்ட இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக யுவராஜ் சிங் கடைசியாக விளையாடிய நாட்களிலும் சரி, பெங்களூரு அணியில் விளையாடிய போதும் சரி கேப்டனாக கோலி யுவ்ராஜ் சிங்கிற்கு நிறைய ஆதரவளித்து இருந்தார். அந்த வகையில் அவர்கள் இருவருமே தற்போதும் நல்ல நட்புடன் அன்பை பகிர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை