இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!

Updated: Tue, Aug 08 2023 20:14 IST
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்! (Image Source: Google)

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த கவனமும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் மீது திரும்பி இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மிகப்பெரிய திருவிழாவிற்காக தயாராகி வருகின்றனர் .

மேலும் ஒவ்வொரு நாடும் உலக கோப்பையை கைப்பற்ற தங்கள் அணியை பலமாக செதுக்கி வருகின்றன. உலகக் கோப்பை போட்டிக்கு விளையாடும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களை மாற்றுவதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும்.

2011 ஆம் ஆண்டிற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்தியா அரை இறுதியில் தோற்று வெளியேறியது. இந்த முறை உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருப்பதால் பற்றாணிகளை விட இந்தியாவிற்கு சற்று சாதகமான சூழலே நிலவுகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மகேந்திர சிங் தோனிக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டின் ஒருநாள் ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி மனம் திறந்திருக்கிறார் .

இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், “எனக்கு தேசபக்தி அதிகம். இந்தியா எனது நாடு. அதனால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமலே இருக்கிறது. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்பாக அந்த சிக்கல்களை இந்திய அணி தீர்க்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உலகக்கோப்பையில் கஷ்டப்படுவார்கள்.

மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு தனித்துவமான திறமைகள் அவசியம் வேண்டும். அந்த இடத்தில் களமிறங்கி ஆடும் போது வந்தோம் அடித்தோம் சென்றோம் என்று இருக்க முடியாது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் கல் விரைவாக ஆட்டம் இழந்தால் மிடில் ஆர்டர் தான் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க போராட வேண்டும் .அதற்கு அனுபவம் மிகவும் அவசியம். 

இந்திய அணியில் இருக்கும் இட்ல அட்ரஸ் பேட்ஸ்மன்களுக்கு இதுபோன்ற விஷயங்களை யாரேனும் சொல்லிக் கொடுக்கிறார்களா? அந்த இடத்தில் விளையாட வேண்டும் என்றால் அனுபவம் மிகவும் அவசியம். அதற்காக ஒரு வீரரை மிடில் ஆர்டரில் ஆட வைத்து அனுபவத்தை கொடுத்திருக்க வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி இந்த சிக்கலை சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வெற்றியில் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகித்தவர். மேலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் புற்றுநோயோடு இந்திய அணிக்காக தன் உயிரையும் பனையம் வைத்து விளையாடியவர். அந்தத் தொடரில் இவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். நீண்ட காலமாக இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் காயம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அவர்கள் இருவரும் அணிக்கு திரும்புவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை