தோனியுடன் விளையாடிய பலரும், தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். கம்பீர், சேவாக் , ஹர்பஜன் ஆகியோர் தோனியை தாக்கும் வகையில் சமீபத்தில் பேசி வந்தனர்.

Advertisement

தற்போது அந்த பட்டியலில் யுவராஜ் சிங்கும் வந்து சேர்ந்துவிட்டார். தோனி இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டியில் விளையாடியது எப்படி தெரியுமா என்று பேசியுள்ளார்.

Advertisement

தோனியுடன் கிரிக்கெட்டின் முடிவு காலத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அவருக்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர், கேப்டன் என ஒட்டுமொத்த ஆதரவும் அவருக்கு இருந்தது. இதனால் தான் தோனியால் 350 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட முடிந்தது. தோனியை 2019 உலககோப்பை தொடருக்கு எல்லாம் அழைத்து சென்றனர்.

ஒவ்வொரு வீரருக்கு இது போன்ற ஆதரவு கிடைப்பது மிகவும் முக்கியம். ஆனால் மற்ற வீரர்களுக்கு தோனிக்கு கிடைத்த ஆதரவு போல் கிடைக்கவில்லை. கம்பீர், ஹர்பஜன், லட்சுமணன், சேவாக் ஆகியோருக்கு எல்லாம் தலை மீது கத்தி தொங்கி கொண்டே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணியை விட்டு நீக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.

இது போன்ற ஒரு அழுத்தமான சூழலில் உங்களால் களத்தில் விளையாட முடியாது. இதை நான் சாக்காக சொல்லவில்லை. இதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறேன். 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியின் சூழலே மாறிவிட்டது என்று யுவராஜ் சிங் பேசியுள்ளார். யவுராஜ் சிங்கின் இந்த பேச்சு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோனி உச்சத்தை தொட்டு விட்டதால் தற்போது அவருடன் விளையாடிய வீரர்களுக்கு எல்லாம் பொறாமை வந்து விட்டதாக குற்றஞ்சாட்டினர். யுவராஜின் தந்தை உயிருடன் இருக்கும் போது தினசரி தோனியை திட்டிவிட்டு தான் அன்றைய நாளையே தொடங்குவார். இதனால் இருவரின் நட்பும் விரிசல் அடைந்தது. தற்போது இருவரும் இணைந்து தொழில் செய்ய இருந்தனர். ஆனால் தற்போது யுவராஜ் சிங்கும் தோனிக்கு எதிராக திரும்பிவிட்டார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News