1-mdl.jpg)
இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் விராட் கோலி சதம் மற்றும் இஷன் கிஷனின் இரட்டை சதத்தால் இந்திய அணி 409 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த இஷன் கிஷன் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் பல்வேறு சாதனைகளை படைத்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 72ஆவது சதத்தை அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கை(71 சதம் ) பின்னுக்கு தள்ளி 2ஆவது இடம் பிடித்தார். இந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
இன்னும் சில ஆண்டுகள் விராட் கோலி விளையாடினால் மேலும் சதங்களை அடித்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்தாலும் பரவாயில்லை, ஆனால் இந்திய அணிக்கு தற்போது அது தேவையில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் கூறியுள்ளார்.