
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் மூலமாக 436 ரன்களைக் குவித்து, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதில் அதிக பட்சமாக் ரவீந்திர ஜடேஜா 87 ரன்களையும், கேஎல் ராகுல் 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். அதன்பின் மறுபக்கம் அரைசதம் நோக்கி நகர்ந்த பென் டக்கெட் 47 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்களிலும் என பும்ராவின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.