
வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் 86, புஜாரா 90, அஸ்வின் 58 ரன்கள் அடிக்க, 404 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணிக்கு எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை ஆகையால் 150 ரன்களுக்கு சுருண்டது. குல்தீப் 5 விக்கெட்டுகள், சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன்பின் ஃபாலோ ஆன் செய்ய வாய்ப்பு இருந்தும் கேஎல் ராகுல் அடை செய்யாமல் இந்தியா பேட்டிங் செய்யும் என முடிவெடுத்தார். 2வது இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் புஜாரா இருவரும் சதம் அடித்தனர். இதனால் மேலும் வலுவான நிலை பெற்ற இந்திய அணி 258/2 என இருக்கும்போது, ராகுல் டிக்ளர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்தியா 512 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
513 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்கள் நன்றாக போராடினர். சாண்டோ 67 ரன்கள், அறிமுக வீரர் சாகிர் உசேன் சதம் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் (84) தவிர எவருமே போராடவில்லை. இறுதிவரை நடந்த அவரது போராட்டமும் எடுபடவில்லை. அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் சுழலில் மொத்த வங்கதேச அணியும் வீழ்ந்தது. இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் அணி 324 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.