
2012 U-19 World Cup Winning Captain Unmukt Chand Announces Retirement (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தகுதியான வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் ஆட அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் இந்திய அணி ஆடியது. அந்தளவிற்கு அதிகமான வீரர்கள் உள்ளனர்.
இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருந்தாலும், அணியில் 11 பேர் மட்டுமே ஆடமுடியும். அதனால் நிறைய திறமையான வீரர்களுக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்தமாதிரியான வீரர்களில் ஒருவர் தான் உன்முக்த் சந்த். 2012ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன். அந்த உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 111 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, கோப்பையை வென்று கொடுத்தார்.