இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவர் வரை போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டி நடைபெற்ற ஆடுகளம் தரக்குறைவாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் டிக்கெட் வாங்கி பார்த்த இந்த போட்டி அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்திருக்கும் என நியூசிலாந்து வீரர் ஜிமி நீசம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெற்றி பெற்ற பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா ஆடுகளம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே நம்பினேன். ஆனால் வெற்றி மிகவும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற போட்டிகளில் சின்ன சின்ன தருணங்கள் கூட மிகவும் முக்கியமாகும். ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் பதற்றப்படக்கூடாது. ரிஸ்க் எதுவும் எடுக்காமல் சிங்கிள்ஸ் எடுக்கவே அதிக கவனம் செலுத்த வேண்டும்.