
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிலும் மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. அடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உதவ, 314 ரன்கள் அடித்தது. ரிஷப் பந்த் 93 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் 73 மற்றும் ஜாகிர் ஹாசன் 51 ரன்கள் அடிக்க, 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 145 ரன்கள் என்ற சிக்கலான இலக்கை துரத்திய இந்தியா 74 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது.