Advertisement

2nd Test, Day 5: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு; வெற்றிக்கு அருகில் இந்திய அணி!

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

Advertisement
2nd Test, Day 5: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு; வெற்றிக்கு அருகில் இந்திய அணி!
2nd Test, Day 5: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு; வெற்றிக்கு அருகில் இந்திய அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 06, 2025 • 07:22 PM

Birmingham Test: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 06, 2025 • 07:22 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களையும், ஹாரி புரூக் 17 பவுண்டரிகளுடன் 158 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இதில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் மீண்டும் சதமடித்து அசத்தியதுடன் 161 ரன்களையும், ரிஷப் பந்த் 65 ரன்களையும், கேஎல் ராகுல் 55 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 69 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் எனும் இமாலய இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட்டும் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு ஜோ ரூட்டும் 6 ரன்களில் நடையைக் கட்ட இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானது. அதன்பின் ஒல்லி போப் 24 ரன்களுடனும், ஹாரி புரூக் 15 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.

இதில் ஒல்லி போப் மேற்கொண்டு ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்களைச் சேர்த்திருந்த ஹாரி புரூக்கும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இணை போறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பென் ஸ்டோவ்க்ஸ் 33 ரன்களை எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் ஜேமி ஸ்மித் 32 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ஆபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் 455 என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இன்னிங்ஸை தொடரவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement