
ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. அடுத்து பிளே ஆஃப் சுற்று மட்டுமே எஞ்சியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதிமுதல் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள்.
ஹார்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பௌலிங்கில் உதவுவார். இவரால் மிடில் ஆர்டர் பலம் பெரும் என்ற காரணத்தினால்தான் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் ஐபிஎல் தொடரில் இன்னும் பந்துவீசாமால் இருக்கிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து இவரை நீக்கவிட்டு ஷர்தூல் தாகூர் அல்லது தீபக் சஹாரை சேர்க்க வேண்டும் என பலர் கூறி வலியுறுத்தி வருகின்றனர்.