
3 players Chennai Super Kings can retain ahead of mega auction (Image Source: Google)
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணிக்காக கேப்டன் தோனி புதிய வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்.
அதன்படி கடந்த சீசன்களில் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்கவுள்ளனர். இதற்காக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்றும் தோனி அறிவுறுத்தியிருப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த லிஸ்டில் சுரேஷ் ரெய்னா இல்லை.
சிஎஸ்கேவுக்கு கடந்த 2 சீசன்களாக ருதுராஜ் கெயிக்வாட் - டூ பிளசிஸ் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். நன்கு செட்டான ஜோடி என்பது மட்டுமல்லாமல், டூ பிளசிஸ் இன்னும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.