3rd Test, Day 1: நிதீஷ் ரெட்டி அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது.

Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டி ஒரே ஓவரில் எதிரணி தொடக்க வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் லெவனில் இடம் கிடைத்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பென் டக்கெட்டும், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலியும் அடுத்தடுத்து நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீல் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் - ஒல்லி போப் இணை விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
இதன் காரண்மாக இங்கிலாந்து அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 24 ரன்களுடனும், ஒல்லி போப் 12 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now