
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும், ஒரு நாள் போட்டி தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் இறுதிப்போட்டி டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இதனால் இந்த தொடரானது 2-1 என்ற நிலையில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று இருந்தது. மேலும் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. மறுபுறம் இந்த போட்டியை எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற முனைப்பில் நியூசிலாந்து அணி இருந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக மொயின் அலி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்காக சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி விரைவாக ரன்கள் குவித்தாலும் மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் 11ஓவர்களில் 105 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்திவீச்சினால் 20 ஓவர்களில் 175 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி 175 ரன்கள் நியூசிலாந்து அணியால் கட்டுப்படுத்தப்பட்டது.