மிகக்குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட ஐபிஎல் அணி கேப்டன்கள்!
மிகக்குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும், ஐபிஎல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

மிகக்குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட ஐபிஎல் அணி கேப்டன்கள்! (Image Source: Google)
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதன்மூலம் அவர் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைக்கவுள்ளார். ஏனெனில் பல சர்வதேச போட்டிகளில் விளையாடியும் ஐபிஎல் அணியின் கேப்டனாக மாற முடியாத பல ஜாம்பவான்கள் உள்ளனர், ஆனால் ராஜத் பட்டிதார் 4 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இதற்கு முன் 3 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிதிஷ் ராணா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2021 முதல் ஆர்சிபி அணியில் ஒப்பந்தமான ராஜத் பட்டிதார், அடுத்த சில ஆண்டுகளில் அந்த அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக மாறிவிட்டார். மேற்கொண்டு 2022 முதல் 2024 வரை கேப்டனாக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸை ஆர்சிபி அணி தக்கவைக்காததால் கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அச்சயமத்தில் விராட் கோலியும் கேப்டன் பதவியை ஏற்க மறுத்ததன் காரணமாக ராஜத் பட்டிதாருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு ராஜத் பட்டிதார் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளான சையத் முஷ்டாக் அலி தொடர், விஜய் ஹசாரா கோப்பை தொடர்களில் கேப்டனாக வழிநடத்தினார் என்பது க்றிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி, ஐபெஇல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
நிதிஷ் ராணா
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் நிதீஷ் ரானா. கடந்த ஐபிஎல் 2023இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நிதிஷ் இருந்தார். அப்போது அவர் வெறும் மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அந்த அணியின் வழக்கமான கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட பிறகு, அணிக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டபோது, நிதீஷே அணி நிர்வாகத்திடம் கேப்டனாகத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன்
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பவர் பிரபல வீரர் சஞ்சு சாம்சன் தான். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட தருணத்தில் வெறும் 7 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இதுதவிர்த்து கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்திய வீரர் எனும் தனித்துவ சாதனையையும் அவர் படைத்தார். முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்திற்கு முன்னதாக ராயல்ஸ் அணி விடுவித்ததை அடுத்து சஞ்சு சாம்சனுக்கு அந்த வாய்ப்பானது வழங்கப்பட்டது.
கருண் நாயர்
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிப்பவர் கருண் நாயர். இவர் 8 சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். முன்னதாக அந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜாகீர் கான் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து அந்த பதவி கருண் நாயருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜிதேஷ் ஷர்மா
Also Read: Funding To Save Test Cricketஇந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடிப்பவர் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜித்தேஷ் சர்மா. இவர் 9 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் அணியின் வழக்கமான கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாகவும், அவருக்கு பதில் கேப்டனாக செயல்பட்ட சாம் கரண் இங்கிலாந்து அணிக்காக விளையாட சென்றதன் காரணமாகவும், சீசனின் கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மாவை கேப்டனாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News