Advertisement

5th Test Day 1: குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விகெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 07, 2024 • 13:56 PM
5th Test Day 1: குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!
5th Test Day 1: குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். எப்போதும் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இன்றைய போட்டியில் நிதான ஆட்டத்தை கையாண்டனர்.

Trending


இதன் மூலம் தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்களைச் சேர்த்தனர்.  அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் டக்கெட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 79 ரன்களைச் சேர்த்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஜோ ரூட்டின் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின் தனது 100ஆவது போட்டியில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 

 

அதன்பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் ரன்கள் ஏதுமின்றி குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement