
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்பிவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. கேப்டன் அத்தபத்து, விஷ்மி, கவிஷா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஹர்ஷித்த 23 ரன்களையு, ஹாஷினி பெரேரே 33 ரன்களையும், நிலாக்ஷி டி சில்வா 22 ரன்களையும் சேர்த்தனர்.