
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களில் 6 முறை இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
ஒருமுறை மட்டுமே டிரா செய்துள்ளதால் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்ற மோசமான சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை முதல் தடவையாக தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3ஆவது வீரராக புஜாராவும், 4ஆவது வீரராக விராட் கோலியும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.