Advertisement

இதுபோன்ற ஒரு வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!

இந்த வெற்றி முழுக்க முழுக்க எங்களது அணியின் அனைத்து வீரர்களையும் சாரும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 23, 2023 • 12:17 PM
A win like this can boost our confidence, says Hardik Pandya
A win like this can boost our confidence, says Hardik Pandya (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற  குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. குஜராத் அணி சார்பாக கேப்டன் ஹார்டிக் பாண்டியா 66 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது.

Trending


குறிப்பாக முதல் 10 ஓவர்களின் முடிவில் 80 ரன்களை அடித்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. இதனால் அவர்கள் எளிதில் அசத்தலான வெற்றியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்த 10 ஓவருக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே குவித்ததால் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே லக்னோ அணியால் குவிக்க முடிந்தது. இதன் காரணமாக குஜராத் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றியை பெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா, “இந்த வெற்றி முழுக்க முழுக்க எங்களது அணியின் அனைத்து வீரர்களையும் சாரும். ஏனெனில் நாங்கள் ஒரு சாம்பியன் அணி. கடந்த ஆண்டு இதேபோன்று வெற்றிகளை பெற்றுள்ளோம். இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் பாதிக்கு பிறகு விக்கெட்டுகள் விழ விழ சூழ்நிலை மாறியது. அதை பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

இதுபோன்ற ஒரு வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும். இந்த போட்டியின் போது நாங்கள் பத்து ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் லக்னோ அணி பேட்டிங் செய்கையில் இரண்டாம் பாதியில் நாங்கள் பந்துவீசிய போது எங்களது பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது.

இறுதியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்ற போது போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். அதே போன்று ஓவர்கள் குறைய குறைய எங்களது பந்துவீச்சாளர்களும் அசத்தலாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு எங்களது அனைத்து பந்துவீச்சாளர்களுமே காரணம்” என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement