
Aakash Chopra calls for IPL to allow 5 overseas players in playing XI (Image Source: Google)
ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் விளையாடிவந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15ஆவது சீசனிலிருந்து 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக ஆடுகின்றன. எனவே 15ஆவது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது.
இந்த ஏலத்தில் மொத்தமாக அனைத்து அணிகளும் சேர்ந்து 551 கோடி செலவு செய்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்தன. அதிகபட்சமாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தீபக் சாஹரை ரூ.14 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது.
ஐபிஎல் 15வது சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களைவிட மிகவும் சுவாரஸ்யமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.