
Aakash Chopra Felt Surprised By Bhuvneshwar Kumar’s Omission In Indian Test Squad (Image Source: Google)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவும் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புவனேஸ்வர் குமார் சில வருடங்களாகவே அதிக அளவில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சற்று ஓய்வெடுத்து வருகிறார். இதனால் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.